2030க்குள் SPM முடித்தவர்களில் 70 விழுக்காட்டினர் TVET துறையில் சேர்ப்பதே இலக்கு
- Surendran Sumdraraj
- 05 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 5-
தொழில்நுட்ப மற்றும் தொழில் சார்ந்த கல்வி மற்றும் பயிற்சி (TVET) துறையில் SPM தேர்ச்சி பெற்ற மாணவர்களின் சேர்க்கையை 70 சதவீதமாக உயர்த்துவது என தேசிய TVET மன்றம் புதிய இலக்கை நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கு 13ஆம் மலேசிய திட்டம் (RMK13) முடிவடையும் காலத்திற்குள் அடையப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி கூறுகையில், நாட்டின் புதிய வளர்ச்சி திசை திறன் மற்றும் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கிறது. அதனால் TVET துறையின் முக்கியத்துவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றார்.
தேசிய TVET மன்றத்தின் தலைவருமான அவர், கடந்த டிசம்பர் மாதம் வரை TVET துறையில் மாணவர்கள் சேரும் விகிதம் 53.9 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். இது அரசாங்கம் நிர்ணயித்துள்ள புதிய இலக்கை அடைவதற்கான நல்ல முன்னேற்றமாக கருதப்படுகிறது.
“மொத்தத்தில், TVET துறை உயர்திறன் கொண்ட தொழிலாளர்களை உருவாக்கும் முக்கிய பாதையாக இருக்கும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் போட்டித்திறனுக்கும் பெரும் ஆதரவாக அமையும்,” என்று அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



