நஜிப்பிற்கு முழு அரச மன்னிப்பு கோரி 72 அம்னோ பிரிவுகள் மனு! – அம்னோ பொதுச்செயலாளர் கருத்து

top-news
FREE WEBSITE AD


கோலாலம்பூர், ஆகஸ்ட் 23: தற்போது சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு நீதி மற்றும் முழு அரச மன்னிப்பு கோரி எழுபத்திரண்டு அம்னோ பிரிவுகள் மனுக்களை சமர்ப்பித்துள்ளதாக, அம்னோ பொதுச்செயலாளர் அசிரஃப் வாஜ்டி டுசுகி தெரிவித்தார்.

நாடு முழுவதும் மொத்தம் 171 பிரிவுகளில் இருந்து கட்சி பெற்ற பிரேரணைகளில் இவையும் அடங்கும் என்றும், அம்னோவில் மொத்தம் 191 பிரிவுகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

போஸ்கு’ சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருக்கும் வரை, அம்னோவின் உந்துதல் ஒருபோதும் நிறுத்தப்படாது என்று நஜிப்பின் புனைப்பெயரை ஆதரவாளர்கள் குறிப்பிடுவதை அவர் சுட்டிக்காட்டி பேசினார்.

அம்னோ தலைமையின் மீது நம்பிக்கை கொண்டிருங்கள். மேலும் நாம் அனைவரும் நஜிப்பிற்காகத் தொடர்ந்து பிரார்த்தனை செய்வோம், ஏனென்றால் பிரார்த்தனையே நமது ஆயுதம் என்று அவர் இன்று காலை அம்னோ பொதுக் கூட்டத்தில் தெரிவித்தார்.

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *