ஆரோன்-வூய் யிக் செயல்திறனை மேம்படுத்துவர்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 10-
 இந்த ஜூலை மாதம் தொடங்கும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளை எதிர்கொள்ளும் முன், மூன்று முக்கிய போட்டிகள் நாட்டின் முதல் நிலை இரட்டையர்களான ஆரோன் சியா-சோ வூய் யிக் ஒரு பயிற்சியாக அமையும்.
உலக தரவரிசையில் நான்காவது இடத்தில் இருக்கும் இவர்கள், மே 21 முதல் 26 வரை மலேசிய மாஸ்டர்ஸ் தொடரிலும், அதைத் தொடர்ந்து மே 28 முதல் 2 ஜூன் வரையில் நடக்கவிருக்கும் சிங்கப்பூர் பொது விளையாட்டுப் போட்டி,  ஜூன் 4 முதல் 9 வரை நடைபெறும் இந்தோனேசியா பொது விளையாட்டுப் போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, தங்களின் செயல்திறனை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்று ஆரோன் ஒப்புக் கொண்டுள்ளார்.
விளையாட்டுகள் தொடங்குவதற்கு  நான்கு முதல் ஆறு வாரங்களுக்கு இடையே நீண்ட ஓய்வு காலம் இருப்பதால், சிறந்த அளவில் செயல்படுவது எங்களுக்கு மிகவும் முக்கியம் என்று அவர் கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை செங்டுவில் நடந்த தாமஸ் கோப்பை போட்டியில் தேசிய அணிக்கு வெண்கலப் பதக்கம் வெல்ல உதவினர் ஆரோன்-வூய் யிக்.
இந்த ஆட்டத்தில், ஆரோன்-வூ யிக் 15-21, 21-12, 21-17 என்ற மூன்று செட்டில் வெற்றி பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *