ரோன் 95 இலக்கிடப்பட்ட மானியத்தின் 5 பலவீனங்களை ரபிசி கோடிட்டுக் காட்டுகிறார்!
- Muthu Kumar
- 24 Sep, 2025
கோலாலம்பூர், செப். 24-
ரோன் 95 இலக்கிடப்பட்ட மானியத்தின் 5 பலவீனங்களை முன்னாள் அமைச்சர் ரபிசி ரம்லி கோடிட்டுக் காட்டியுள்ளார்.பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த இலக்கு மானிய பொறிமுறையில் ஐந்து பலவீனங்கள் உள்ளன.
2025, 2026 ஆண்டுகளில் ஆண்டுக்கு சுமார் 10 முதல் 15 பில்லியன் ரிங்கிட் வரை மதிப்பிடப்பட்ட ரோன்95 மானியத் தொகையை இந்த வழிமுறையில் சேமிக்காமல் போகலாம்.நிதி நிலையைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் ஒதுக்கீடு வழங்கப்படுவதால் எண்ணெய் நுகர்வு அளவு கூர்மை குறையாது.
எண்ணெய் விலையை லிட்டருக்கு வெ.1.99 ஆகக் குறைக்க அரசாங்கம் மானியங்களை அதிகரிக்க வேண்டும்.எனவே எனது தோராயமான மதிப்பீட்டின்படி 2025, 2026 ஆம் ஆண்டுகளில் அரசாங்க மானியச் செலவு ஆண்டுக்கு 10 முதல் 15 பில்லியன் ரிங்கிட் வரை இருக்கும்.
எனவே, நிதி நிலையை வலுப்படுத்துவதில் ஏற்படும் தாக்கம்,சந்தை ஆய்வாளர்களால் முன்னர் கணிக்கப்பட்ட அளவுக்கு பெரிதாக இல்லை.கூடுதலாக புதிய மானிய விநியோக முறை முன்பை விட நியாயமானதாக இருக்காது என்று ரபிசி கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



