ம.இ.கா-வின் எந்த ஒரு முடிவையும் ஏற்றுக்கொள்கிறேன்! - ஜாஹிட் ஹமிடி
- Shan Siva
- 19 Nov, 2025
கோலாலம்பூர், நவ 19: மஇகா தனது எதிர்காலம் குறித்து எடுக்கும் எந்தவொரு முடிவையும் தாம் ஏற்றுக்கொள்வதாக பாரிசான் நேஷனல் (பிஎன்) தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி இன்று தெரிவித்தார்.
மஇகாவில்
ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை, குறிப்பாக
கட்சியின் அண்மைய ஆண்டு பொதுக் கூட்டத்தில் நடந்த விவாதங்களை, பிரதிநிதிகள் ஒருமனதாக பாரிசானை விட்டு
வெளியேறுவது குறித்த இறுதி முடிவை மத்திய செயற்குழு (சிடபிள்யூசி) மற்றும் கட்சித்
தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரனிடம் விட்டுவிட ஒப்புக்கொண்டதை தாம் உன்னிப்பாகக்
கண்காணித்ததாகக் கூறினார்.
அவர்களின் பொதுக்
கூட்டத்தில் நடந்த விவாதங்களை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், மஇகா பிரதிநிதிகள் மற்றும் தலைமை எடுக்கும் எந்த
முடிவுகளையும் தாம் மதிப்பதாகவும், மேலும் அவர்களின்
உள் விவகாரங்களில் தலையிட தனக்கு எந்த எண்ணமும் இல்லை என்றும் ஜாஹிட் கூறினார்.
அவர்கள்
எடுக்கும் எந்த முடிவையும் நாங்கள் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்வோம். இந்த முடிவு
முற்றிலும் கட்சியைப் பொறுத்தது என்று அவர் விஸ்மா
எம்சிஏவில் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



