சபரிமலையில் விடுதி அறைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்
- Surendran Sumdraraj
- 11 Jul, 2026
திருவனந்தபுரம், ஜூலை 11-
சபரிமலையில் பக்தர்கள் தங்கும் விடுதி அறைகளை இனி ஆன்லைன் முறையில் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபரிமலையில் நடைபெறும் அனைத்து செயல்பாடுகளும் படிப்படியாக டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றார்.
அதன் ஒரு பகுதியாக, சபரிமலையில் உள்ள விடுதி அறைகள் அனைத்தையும் ஆன்லைன் முறையில் பக்தர்கள் முன்பதிவு செய்ய வசதி செய்யப்படும் என அவர் கூறினார்.
தற்போது வரை 190 அறைகள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டு வந்ததாகவும், இனி கூடுதல் அறைகள் தயார் செய்யப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை, சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு தங்கும் வசதியை எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்பதிவு முறையை ஆன்லைனில் கொண்டு வருவதன் மூலம், நீண்ட வரிசைகள், இடமின்மை மற்றும் நேரடி முன்பதிவில் ஏற்படும் சிரமங்களைக் குறைக்க முடியும்.
மேலும், இனிமேல் அய்யப்ப சங்கமம் நடத்தப்படாது என்றும் தேவஸ்தான தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



