உயர் பதவிகளில் இனம் ஒரு தடையாக இருக்கக்கூடாது! - எம்.குமாருக்கு ஆதரவாக அன்வார்

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஆக 20: புக்கிட் அமானின் குற்றவியல் புலனாய்வுத் துறையின் (சிஐடி) இயக்குநராக எம்.குமார் நியமிக்கப்பட்டதை பிரதமர் அன்வர் இப்ராஹிம் இன்று ஆதரித்தார், அரசாங்கத்தில் முக்கியமான பதவிகளை வகிக்கும் திறமையான நபர்களின் வழியில் இனம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று அவர் கூறினார்.

மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையை வழிநடத்த இடமாற்றம் செய்யப்பட்ட ஷுஹெய்லி ஜெயினுக்குப் பதிலாக குமார் ஆகஸ்ட் 8 ஆம் தேதி கூட்டரசு  சிஐடி தலைவராக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார்.

இந்நிலையில், ஆகஸ்ட் 12 அன்று, பெர்சாத்துவின் பத்ருல் ஹிஷாம், எம். குமாரின் நியமனத்திற்கு நாடு DAPயின் சித்தாந்தத்தை தழுவத் தொடங்கியுள்ளது என்பதை இது காட்டுகிறது என்று  குற்றம் கூறினார்.

இந்த மாதிரியான போக்கினை அரசாங்கம் தொடர்ந்தால் நாடு வவிரைவில் அதன் முதல் பூமிபுத்ரா அல்லாத தலைமை நீதிபதி, ஆயுதப்படைகளின் தலைவர் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலைப் பெற முடியும் என்று பெர்சாத்துவின் பத்ருல் ஹிஷாம் அரசாங்கத்தை சாடினார்.

இதனை அடுத்து அன்வார் தமது கருத்தைப் பதிவு செய்தார்.

பல்வேறு துறைகளின் பிற இயக்குநர்கள் உட்பட நாட்டில் பெரும்பாலான உயர் பதவியில் உள்ள காவல் துறை தலைவர்கள் மலாய்க்காரர்கள் தான் என அன்வார் பதில் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *