ஏசி மிலன் 2-1 என்ற கோல் கணக்கில் நாபோலியை வீழ்த்தியது
- Tamil Malar (Reporter)
- 29 Sep, 2025
மிலன், செப். 30-
செய்தி-வெற்றி மைந்தன்
ஏசி மிலன், செரி ஏ லீக் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது,
நடப்பு சாம்பியனான நாபோலியை சான் சிரோ மைதானத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, பட்டம் வெல்லும்
முக்கிய போட்டியாளராக எச்சரிக்கை விடுத்தது. அரை மணி நேரத்திற்கு மேல் 10 வீரர்களுடன் விளையாடிய போதிலும், மிலன் இந்த
வெற்றியைப் பெற்றது.
ரோஸ்ஸோநெரியின் நாயகனாக கிறிஸ்டியன் புலிசிக் திகழ்ந்தார். மூன்றாவது
நிமிடத்தில் அலெக்ஸிஸ் சேலமேக்கர்ஸின் முதல் கோலை உருவாக்கினார், பின்னர் 31-ஆவது நிமிடத்தில் அழகிய குழு ஆட்டத்தின்
மூலம் இரண்டாவது கோலை அடித்து முன்னிலையை இரட்டிப்பாக்கினார். இந்த அமெரிக்க
தாக்குதல் வீரர், இந்த சீசனில் ஏற்கனவே ஆறு கோல்கள் அடித்து,
மிலனின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
ஏசி மிலன், 12 புள்ளிகளுடன் நாபோலி,
ரோமாவுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டாலும், கோல்
வித்தியாசத்தில் முன்னிலை பெற்று முதலிடத்தில் உள்ளது. 60-ஆவது
நிமிடத்தில், பெர்விஸ் எஸ்டுபினான், ஜியோவானி
டி லோரென்சோவை இழுத்ததற்காக சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார். இதையடுத்து,
நாபோலிக்கு வழங்கப்பட்ட பெனால்டியை கெவின் டி புருய்னே கோல்
அடித்து, இடைவெளியைக் குறைத்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



