பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் வெற்றியுடன் ஆரம்பிப்பாரா நடால்!

top-news
FREE WEBSITE AD


பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் இன்று துவங்குகிறது. ஆண்கள் ஒற்றையரில் ஸ்பெயினின் நடால் (வயது 37) மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இத்தொடரில் 14 முறை கோப்பை வென்றுள்ள நடால் கடந்த ஆண்டு காயத்தால் பங்கேற்கவில்லை. அடிக்கடி காயத்தால் அவதிப்படும் இவருக்கு, கடைசி பிரெஞ்ச் ஓபனாக அமையலாம். எனவே கோப்பையுடன் விடை பெற முயற்சிக்கலாம். முதல் சுற்றில் ஜெர்மனியின் ஸ்வெரேவை சந்திக்கும் நடால், தொடரை வெற்றியுடன் துவக்க வேண்டும்.

'நடப்பு சாம்பியன்' அந்தஸ்துடன் களமிறங்கும் உலகின் 'நம்பர்-1' செர்பியாவின் நோவக் ஜோகோவிச், மீண்டும் அசத்தினால் தனது 25வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லலாம். மற்றொரு ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், ரஷ்யாவின் டேனியல் மெத்வெடேவ் உள்ளிட்டோரும் கோப்பை வெல்ல போராடலாம். இந்தியா சார்பில் சுமித் நாகல் பங்கேற்கிறார்.

பெண்கள் ஒற்றையரில் 'நடப்பு சாம்பியன்' போலந்தின் இகா ஸ்வியாடெக் மீண்டும் சாதிக்கலாம். உலகின் 'நம்பர்-1' வீராங்கனையான இவருக்கு, பெலாரசின் அரினா சபலென்கா போட்டியாக அமையலாம். அமெரிக்காவின் கோகோ காப், மேடிசன் கீஸ், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, பிரான்சின் கரோலின் கார்சியா உள்ளிட்டோரும் சாம்பியன் ஆக முயற்சிக்கலாம்.

ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மாத்யூ எப்டென் ஜோடி களமிறங்குகிறது.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *