ராதிகாவின் நடிப்புக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்!

top-news
FREE WEBSITE AD

நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்சன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், நடிகை ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'தாய் கிழவி'

பவுனுத்தாயி என்ற வயதான பெண் கதாபாத்திரத்திற்காக அவர் சுமார் 4.5 மணி நேரம் மேக்கப் போட்டு நடித்துள்ளார். இதற்காக கேரளாவிலிருந்து வினீஷ் என்ற ஒப்பனை கலைஞர் வரவழைக்கப்பட்டார். படத்தின் டீஸர் வெளியானபோதே படம் மீதான எத்ரிபார்ப்பு அதிகரித்தது. சமீபத்தில் இப்படத்தை பார்த்த கமல்ஹாசன் அனைவரையும் பாராட்டி தள்ளினார்.

வருகிற 27ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் பிரத்யேக காட்சியை பார்த்த திரையரங்க உரிமையாளரின் விமர்சனம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த நகைச்சுவை படமாக இது இருக்கும், ரொம்ப நாட்களுக்கு பிறகு வயிறு வலிக்க வலிக்க சிரித்து பார்த்த படம் இது என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி ராதிகாவின் நடிப்புக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். கண்டிப்பாக திரையரங்கில் பார்க்க வேண்டிய படம் இது என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *