ரஃபிஸியும் நிக் நஸ்மியும் அமைச்சர் பதவிகள் முடிவை பிரதமரிடமே விட்டிருக்க வேண்டும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 31-

பிகேஆர் கட்சித் தேர்தலில் தோல்வியுற்றதைத் தொடர்ந்து, தங்களின் அமைச்சர் பதவிகளை தாங்கள் ராஜினாமா செய்ய வேண்டுமா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கும் பொறுப்பை ரஃபிஸி ரம்லியும் நிக் நஸ்மி நிக் அஹ்மாட்டும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிடமே விட்டிருக்க வேண்டும்.

அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்யும் உரிமையை ரஃபிஸியும் நிக் நஸ்மியும் கொண்டிருந்தாலும், ஓர் அமைச்சர் பதவியை வழங்குவது பிரதமரின் தனிப்பட்ட உரிமையாக இருப்பதை அவர்கள் இருவரும் நன்கு அறிந்திருக்க வேண்டும் என்று, சரவாக் மாநில அமைச்சர் அப்துல் கரிம் ரஹ்மான் ஹம்ஸா தெரிவித்தார்.

"தங்களின் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்ய தாங்கள் விரும்பும் எண்ணத்தை
அவர்கள் பிரதமரிடம் வெளிப்படுத்தி இருக்க வேண்டும். அதன் பின்னர் அவர்கள் தொடர்ந்து அமைச்சர்களாக இருப்பதா இல்லையா என்று இறுதி முடிவை எடுக்கும் பொறுப்பு அன்வாரிடமே விட்டிருக்க வேண்டும்.
“அவ்வாறு செய்யாமல் ரஃபிஸியும் நிக் நஸ்மியும் தங்களின் ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்திருக்கக் கூடாது" என்று எஃப்எம்டியிடம் கரிம் தெரிவித்தார்.

இவர்கள் இருவரின் ராஜினாமாக்களும் மலேசியா முழுமையிலும் நிலைத்தன்மையற்ற அரசியல் மற்றும் பொருளாதார சூழலை ஏற்படுத்தக் கூடும் என்றும் கரிம் தெரிவித்தார்.இம்மாதம் 23ஆம் தேதி நடந்த கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் மற்றும் உதவித் தலைவர் பதவிகளை தற்காத்துக் கொள்வதில், முறையே பொருளாதாரத்துறை அமைச்சர் ரஃபிஸியும் இயற்கை வளங்கள் மற்றும் நீடித்த சுற்றுச் சூழல்துறை அமைச்சர் நிக் நஸ்மியும் தோல்வியுற்றனர்.

இதேபோன்ற ஒரு சூழ்நிலையில் இருந்த கரிம், கட்சித் தேர்தலில் தாங்கள் நிராகரிக்கப்பட்டதினால் அவர்கள் இருவரும் அதிருப்தி அடைந்திருப்பார்கள் என்பதை தாம் புரிந்து வைத்திருப்பதாக கூறியதுடன், "இதுதான் அரசியல்" என்றார்.பெசாக்கா பூமிபுத்ரா பெர்சத்து கட்சியின் உதவித் தலைவருக்கான தேர்தலில் தாம் தோல்வியுற்ற பின்னர், இவ்வாண்டு பிப்ரவரியில் மாநில சுற்றுலா, தொழில்துறை மற்றும் கலைத்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலக தாம் விரும்பியதாக கரிம் கூறினார்.

எனினும், அமைச்சர் பதவியில் தாம் தொடர்ந்து நீடிப்பதா இல்லையா என்பதை முடிவு செய்யும் பொறுப்பை மாநில முதலமைச்சர் அபாங் ஜொஹாரி ஒப்பெங்கிடமே தாம் விட்டு விட்டதாகவும் அதன் பின்னர் செய்தி வெளியிட்ட அபாங் ஜொஹாரி, மாநில அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படாது என்று அறிவித்ததாகவும் கரிம் தெரிவித்தார்.

Abdul Karim menyatakan Rafizi dan Nik Nazmi seharusnya serahkan keputusan letak jawatan menteri kepada Perdana Menteri Anwar Ibrahim selepas kalah pemilihan PKR. Tindakan sendiri mereka boleh cetus ketidakstabilan politik dan ekonomi di Malaysia, katanya.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *