தன் வீட்டு வேலை ஆட்களை வைத்து "கோரஸ்" பதிவு செய்த ஏ ஆர் ரகுமான்!

top-news
FREE WEBSITE AD

 இந்த வருடத்தில் அவரது இசையமைப்பில் அயலான் திரைப்படமும், லால் சலாம் திரைப்படமும் வெளியாகின. இரண்டு படங்களில் அயலான் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. ஆனால் லால் சலாம் படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக லால் சலாம் படத்தின் இசையும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்று ரசிகர்கள் ஓபனாகவே பேச ஆரம்பித்தனர்.

இருந்தாலும் அடுத்தடுத்த படங்களில் கண்டிப்பாக ஏ.ஆர்.ரஹ்மான் இசை பேசுபொருளாக மாறும் என்று அவரது ரசிகர்கள் இருந்தனர். கடைசியாக அவரது இசையமைப்பில் ஆடுஜீவிதம் படம் வெளியானது. அதில் ரஹ்மானின் இசை கொண்டாடப்பட்டது. அடுத்ததாக தக் லைஃப், ராயன் உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன.

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் செய்த தரமான சம்பவம் குறித்த தெரியவந்திருக்கிறது. அதாவது விக்ரமன் இயக்கிய புதிய மன்னர்கள் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை. அந்தப் படத்தில் இடம்பெற்ற வானிலே ஏணி போட்டு பாடல் ட்யூனை விக்ரமனுக்கு போட்டுக்காட்டினாராம் ரஹ்மான். அப்போது அதில் கோரஸ் இருந்தால் நன்றாக இருக்கும் என்று விக்ரமன் சொன்னாராம்.

அதற்கு ஏ.ஆர்.ரஹ்மானோ இல்லை சார் இதில் கோரஸ் வேண்டாமே என்று சொல்ல; இல்லை கோரஸ் வேண்டும் என்று விக்ரமன் கூறினாராம். உடனே தனது உதவியாளரை அழைத்து கோரஸ் பாடுபவர்களை கூப்பிட்டு வரச்சொன்னாராம். ஆனால் அந்த நேரம் பார்த்து கோரஸ் பாடகர்கள் பிஸியாக இருந்தார்களாம். உடனே யோசித்த ரஹ்மான், தனது வீட்டில் பணிபுரியும் தோட்டக்காரர்கள், சமையல்காரர்களை அழைத்து வந்து எப்படி பாட வேண்டும் என சொல்லிக்கொடுத்து அந்தப் பாடலுக்கான கோரஸை ரெக்கார்ட் செய்தாராம். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *