உலகிலேயே மிகத் திறமையானவர் மகாதீர் மட்டும்தான்! - சைஃபுடின் நசுத்தியோன்

top-news
FREE WEBSITE AD


 கோலாலம்பூர்‌, ஜூன்‌ 26 : பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்‌ இப்ராஹிமின்‌ நிர்வாகத்தை முன்னாள்‌ பிரதமர்‌ மகாதீர்‌ மோசமாக விமரசித்திருப்பதை. உள்துறை அமைச்சர்‌ சைஃபுடின்‌ நகத்தியோன்‌ இஸ்மாயில்‌ கடுமையாகச்‌ சாடியுள்ளார்‌.

 

அன்வாரின்‌ அமைச்சரவை, நிர்வாகத்தில்‌ திறமை குறைவாக இருக்கிறது என்றும்‌ பல அமைச்சர்களுக்கு அரசாங்கத்தில்‌ போதிய அனுபவம்‌ இல்லை என்றும்‌. அண்மையில்‌, எஃப்எம்டிக்கு வழங்கிய பேட்டி ஒன்றில்‌ மகாதீர்‌ கூறியிருந்தார்‌.

 

“உலகில்‌ மகாதீர்‌ ஒருவர்‌ மட்டும்தான்‌ மிகவும்‌ திறமையானவர்‌ ” என்ற காரணத்தினால்‌ (இவர்‌ கூறியிருப்பதை) நான்‌ ஒப்புக்‌ கொள்கிறேன்‌” என்று, கோலாலம்பூர்‌. செராஸில்‌ உள்ள போலீஸ்‌ கல்லூரியில்‌  நடந்த செய்தியாளர்கள்‌

கூட்டம்‌ ஒன்றின்போது சைஃபுடின்‌ கிண்டலாகத்‌ தெரிவித்தார்‌.

 

கபந்த 1981 முதல்‌ 2003 ஆம்‌ ஆண்டு, வரையிலும்‌ அதன்‌ பின்னர்‌ 2018 முதல்‌ 2020

ஆம்‌ ஆண்டு வரையிலும்‌ மகாதீர்‌ பிரதமராக இருந்தார்‌.

 

இரண்டாவது தடவையாக மகாதீர்‌ பிரதமராக இருந்தபோது அமைக்கப்பட்ட நாட்டின்‌ 20 ஆவது. அமைச்சரவையில்‌, உள்நாட்டு வாணிபம்‌ மற்றும்‌ பயனீட்டாளர்‌ விவகாரத்துறை அமைச்சராக சைஃபுடின்‌ இருந்தார்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

 

அன்வாரின்‌ அமைச்சரவையில்‌ இடம்‌. பெற்றிருப்போர்‌ “சிறந்த அரசியல்வாதிகளாக இருந்தாலும், சிறந்த நிர்வாகிகளாக இல்லை என்று, டீசலுக்கான உதவித்‌ தொகை நீக்கம்‌ மற்றும்‌ சேவை வரி உயர்வைச் சுட்டிக்‌ காட்டி

அப்பேட்டியில்‌ மகாதீர்‌ அவ்வாறு கூறியிருந்தார்‌!

 

 

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *