அன்வாருக்கு எதிராக மகாதிர் தொடுத்த வழக்கு அக்டோபரில் விசாரிக்கப்படும்! நீதிமன்றம் உத்தரவு

top-news
FREE WEBSITE AD

 ஷா ஆலம், ஆக 18: பிரதமர் டத்தோஸ்ரீ  அன்வார் இப்ராஹிமுக்கு எதிரான டாக்டர் மகாதிர் முகமதுவின் அவதூறு வழக்கு அக்டோபரில் விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதி நீதிபதி டொனால்ட் ஜோசப் பிராங்க்ளின், அக்டோபர் 21, 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் விசாரணை தேதிகளை நிர்ணயித்தார்.

இருப்பினும், நீதிமன்றத்திற்கு வெளியே கூடியபோது, முன்னாள் பிரதமர் மகாதீர் இந்த வழக்கை விரைவில் விசாரிக்க முடியும் என்று  தெரிவித்தார்.

தனக்கு வயதாகி வருகிறது என்று மகாதிர் செய்தியாளர்களிடம் கூறினார்.

விசாரணை ஆரம்பத்தில் ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 20 வரை என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

கடந்த 2023 ஆம் ஆண்டு,  மார்ச் 18 ஆம் தேதி,  பிகேஆர் மாநாட்டில் தாம் இனவெறி கொண்டவர் என்றும், பதவியில் இருந்தபோது எனது குடும்பத்தை வளப்படுத்தியதாகவும் அன்வார்  கூறியதாக மகாதிர் அன்வார் மீது வழக்குத் தொடர்ந்தார்.

 அன்வாரின் அறிக்கைகள் அவர் பிரதமராக இருந்தபோது வெளியிடப்பட்டதாகவும், அது சாதாரண குடிமக்களால் வெளியிடப்பட்ட அறிக்கைகளை விட இது தம் மீது மிகவும் பேரழிவுமிக்க விளைவை ஏற்படுத்தியதாகவும் மகாதிர் கூறினார்.

மேலும் தனது பொது பிம்பத்தை கெடுக்கும் நோக்கம் கொண்டது என்றும், அன்வாரின் இந்தப் பேச்சு,  பரந்த அளவிலான மக்களால் பார்க்கப்பட்டு கேட்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் ஒரு அரசியல்வாதி மற்றும் முன்னாள் பிரதமர் என்ற தனது அந்தஸ்தை குறைத்துவிட்டதாகவும் மகாதிர் கூறினார்.

எனவே, அன்வார் தன்னைப் பற்றி கூறப்படும் அனைத்து அவதூறு அறிக்கைகளையும் திரும்பப் பெற வேண்டும் என்றும், அவற்றை முக்கிய ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிட வேண்டும் என்றும் மகாதிர் கோரிக்கை வைத்தார்.

மேலும், அன்வார் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும்,  இது போன்று இனி பேசமாட்டேன் என்று, அவர் உறுதியளிக்க வேண்டும் என்றும் மகாதிர் வலியுறுத்தியுள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *