மலேசியாகினிக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கை கைவிட்டார் ஜாஹிட்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்: மலேசியாகினிக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கை தாம் தொடரப் போவதில்லை என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி முடிவு செய்துள்ளார்.

 

கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தனது வழக்கின் கிரிமினல் நடவடிக்கைகள் குறித்து தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் அவதூறானதாகக் கருதப்பட்ட 22 கட்டுரைகளைத் தொடர்ந்து கடந்த 2021- ஆம் ஆண்டு  மார்ச் 24-ஆம் ததேதி வழக்குத் தாக்கல் செய்ததாகக் கூறினார்.

 

இருப்பினும், கிரிமினல் உயர் நீதிமன்றத்தால் கடந்த் 2023-ஆம் ஆண்டு, செப்டம்பர் 4 ஆம் தேதி வழக்குக்குத் தீர்ப்பளிக்கப்பட்டதால், நீதிமன்றத் தீர்ப்பை மதித்து, வழக்கைத் தொடர வேண்டாம் என்று தனது வழக்கறிஞர் அறிவுறுத்தியதாக அவர் கூறினார்.

 

பிரதிவாதிகளின் நடவடிக்கைகள் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியிருந்தாலும், தனக்கு எதிராக எதிர்மறையான உணர்வுகளை ஏற்படுத்தினாலும், இந்த விஷயத்தை தொடர வேண்டாம் என்று முடிவு செய்ததாக அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *