ஸாஹிட் பதவி விலக வேண்டும்! - பெர்சாத்து தலைவர்

top-news
FREE WEBSITE AD


மலாய் வாக்காளர்களின் நலனுக்காக அம்னோவின் கீழ் மீண்டும் ஒன்றிணைவதற்கான அதன் உறுப்பினர்களுக்கான எந்தவொரு அழைப்பையும் தமது கட்சி நிராகரிக்கும் என்று பெர்சாத்து தலைவர் ரஃபிக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

அஹ்மட் ஜாஹிட் ஹமிடி அம்னோ தலைவராக இருக்கும் வரை இதுபோன்ற முறையீடுகள் இருக்கும் என்று அவர் கூறினார்.  கட்சி மாறினால் மட்டுமே மலாய்க்காரர்கள் அம்னோவுக்கு பின்னால் வருவார்கள் என்றும் அவர் கூறினார்.


இது நடக்க வேண்டுமானால் ஜாஹிட் பதவி விலக வேண்டும் என்று பெர்சாத்து  உச்சமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.

மலாய்க்காரர்கள் மத்தியில் அம்னோவுக்கான ஆதரவு குறைந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர்,  ஒரு காலத்தில் கசப்பான போட்டியாளரான டிஏபியை அம்னோ ஆதரிப்பது அதற்குக் காரணம் என்றார்.



அனைத்து மலாய்க்காரர்களையும் அம்னோவுக்குத் திரும்ப அழைக்குமாறும், பெர்சாத்து மற்றும் பாஸ் போன்ற பிளவுபட்ட அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை மலாய்க்காரர்களுக்காக அம்னோவின் கீழ் மீண்டும் ஒன்றிணைக்குமாறும் அம்னோ பிரமுகர் தெங்கு ரசலே ஹம்சா தனது கட்சிக்கு விடுத்த அழைப்பைப் பற்றி கருத்துரைக்கையில் ரஃபிக் இவ்வாறு தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *