ஜாஹிட் பேச்சால் ம.இ.கா-வுக்கு ஓர் இக்கட்டான நிலை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 4: 16வது பொதுத் தேர்தலில் பாரிசான் நேஷனல் தனித்துப் போட்டியிட வாய்ப்புள்ளது என்ற செய்திகளால் ம.இ.கா  அதிக உற்சாகம் அடையவில்லை என அக்கட்சியின் உள்வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக FMT ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பாரிசான் தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியின் அறிக்கை தெளிவற்றதாக இருந்ததாகவும், நடைமுறை காரணங்களுக்காக பாரிசான் மற்ற கூட்டணிகளுடன் ஒத்துழைக்கும் வாய்ப்பை அது விட்டுவைத்திருந்ததாகவும் அவர்கள் கூறினர்.

.பாரிசான் தனித்துப் போட்டியிடுவதே தங்களுக்குச் சிறந்தது என்றாலும், ஜாஹிட்டின் அறிக்கை தெளிவற்றதாக இருந்ததுடன், மும்முனைப் போட்டிகளைத் தவிர்ப்பதற்காக பாரிசான்,  பக்கத்தான் ஹரப்பானுடன் ஒத்துழைத்தால், டி.ஏ.பி மற்றும் பி.கே.ஆர் வேட்பாளர்களிடம் இழந்த தொகுதிகளில் ம.இ.கா போட்டியிட முடியாது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும் என்று ம.இ.கா தரப்பு தெரிவித்துள்ளது.

தங்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பதற்கு முன்,  பாரிசான் தலைவரிடமிருந்து ஒரு தெளிவான நிலைப்பாடு தேவைப்படும் என்றும் அந்த தரப்பு கூறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாஹிட்டின் அறிவிப்பு, அவர் மென்மையடைந்துவிட்டதையும், மேலும் நடைமுறைக்கு ஏற்றவராகத் தோன்றுவதையும் காட்டுவதாகக் கட்சி வட்டாரம் தெரிவித்தது. இருப்பினும், 16வது பொதுத் தேர்தலில் எந்தக் கூட்டணியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து அவர் பரிசீலிக்கவுள்ளார் என்பதைக் குறிப்பிடவில்லை. அவர் அதைத் தெளிவாகக் குறிப்பிடவில்லை, இது ..கா-வை ஓர் இக்கட்டான நிலையில் ஆழ்த்துகிறது என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது

அம்னோவின் 80வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஊடகங்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், அடுத்த பொதுத் தேர்தலில் பாரிசான்  தனித்துப் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்று ஜாஹிட் கூறினார். இருப்பினும், நெகிழ்வுத்தன்மைக்கான வாய்ப்புகள் இன்னும் உள்ளன என்பதைக் கட்சித் தலைவர் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், 222 நாடாளுமன்றத் தொகுதிகளிலும்  வேட்பாளர்களை நிறுத்தாது என்றும் அவர் கூறினார்.

கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருவதை உறுதி செய்வதற்காக, GE16 தேர்தலில் குறைந்தது 115 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட பாரிசான்  திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுவதால், 2022-ல் இழந்த பெரும்பாலான தொகுதிகளில் ..கா-வால் போட்டியிட முடியாமல் போகலாம் என்று மற்றொரு ம.இ.கா வட்டாரம் தெரிவித்துள்ளதாக FMT குறிப்பிட்டுள்ளது.

அவர்கள் 115 தொகுதிகளைக் குறிவைக்கிறார்கள் என்றால், மும்முனைப் போட்டிகளைத் தவிர்ப்பதற்காக பாரிசான் நேஷனல், பக்காத்தான் ஹராப்பான்  அல்லது பெரிக்காத்தான் நேஷனல்  உடன் ஒத்துழைக்கக்கூடும் என்பது வெளிப்படையானது. இதன் பொருள், ஒரு சில தொகுதிகள் மட்டுமே ..கா அல்லது .சீ.ச-வுக்கு வழங்கப்படும். மேலும், அவை முக்கியமாக DAP-யின் கோட்டைகளாக இருப்பதால், அவை கடினமான தொகுதிகளாக இருக்கும். பாரிசான்  ஆட்சியில் மலாய் வாக்குகளைப் பெறுவது எளிதாக இருக்கப்போவதில்லை  என்றும் அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *