ஜெய்ன் ராயன் கொலை வழக்கு! யார் குற்றவாளி? இன்று தெரியும்! பரபரப்பில் நீதிமன்றம்!

top-news
FREE WEBSITE AD

(ஆர்.கோபி)

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 13: ஆட்டிஸம் நோயினால் பாதிக்கப்பட்ட  சிறுவன் ஜெய்ன் ரய்யான் அப்துல் மாட்டினின் கொலை வழக்கு தொடர்பாக இன்னும் சற்று நேரத்தில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படவுள்ளனர் அச்சிறுவனின் பெற்றோர், இந்நிலையில் இன்று 7 மணியில் இருந்தே ஊடகங்கள் நீதிமன்ற வாசலில் காத்திருக்கின்றனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெற்றோர்கள் தங்கள் ஆறு வயது மகனைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்படுவார்களா என்பது குறித்து இன்று தெரியலாம் என்று நம்பப்படுகிறது.

இது கொலைக்கான தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் இருக்குமா? என்ற கேள்விக்கு அவர்கள் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் இருக்கும் என்று என்னிடம் கூறப்பட்டது, ஆனால் எந்தப் பிரிவின் கீழ் என்று எனக்குத் தெரியவில்லை எனக் கூறினார்.

இன்று காலை என்னை நீதிமன்றத்திற்கு வருமாறு போலீசார் கூறினர். நேற்று இரவு தம்பதியினர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு கிடைத்ததாக போலீசார் என்னிடம் தெரிவித்தனர் என்று குறிப்பிட்ட அவர், Zayn Rayyan இன் பெற்றோர் பெரும் அழுத்தத்தில் உள்ளனர்  என்றார். மேலும், தம்பதியினருக்கு ஜாமீன் வழங்க விண்ணப்பிப்பதாக அவர் கூறினார்.

அவர்களின் குற்றங்கள் என்ன என்பதை நாங்கள் காத்திருந்து பார்ப்போம், எந்தப் பிரிவு என்று எனக்குத் தெரியவில்லை.

விசாரணைகளில் உதவுவதற்காக அவர்கள் ரிமாண்ட் செய்யப்படுவதற்கு ஒரு பெரிய வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *