முழங்காலில் வலி - மருத்துவமனையில் நஜிப்!- வழக்கு இன்றும், நாளையும் ஒத்திவைப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 10: முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் முழங்கால் வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால்,  அவர் மீதான 1எம்டிபி வழக்கு இன்றும், நாளையும் உயர் நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் மருத்துவமனையின் மூத்த எலும்பியல் ஆலோசகர், டாக்டர் சித்தி ஹவா தாஹிர், நஜிப்பைப் பரிசோதித்த நிலையில், அவர் வலது முழங்காலில் உள்ள வலிக்கு சிகிச்சை பெற்று வருவதால், அவருக்கு இரண்டு நாட்கள் மருத்துவ விடுப்பு வழங்கியதாகக் கூறினார்.

மருத்துவக் குழு அவருக்கு வலுவான வலி நிவாரணிகளை பரிந்துரைத்துள்ளதாகவும், அந்த மருந்து அவருக்கு தூக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

பிப்ரவரி 2011 மற்றும் டிசம்பர் 2014 க்கு இடையில் அவரது ஆம்பேங்க் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட ரிம2.28 பில்லியன் ரிங்கிட் 1எம்டிபி நிதி தொடர்பாக 25 முறை பணமோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக நஜிப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *