வெள்ளத்திற்கு மழை மட்டும் காரணம் இல்லை! - மெட் மலேசியா

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ 26: வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு மழைப்பொழிவால் மட்டும் ஏற்படுவதல்ல, மாறாக நில பயன்பாட்டு மாற்றங்கள், மக்கள் தொகை அடர்த்தி மற்றும் வடிகால் அமைப்பு செயல்திறன் உள்ளிட்ட நில காரணிகளையும் சார்ந்துள்ளது என்று மெட் மலேசியா தெரிவித்துள்ளது.

வளர்ச்சி, மக்கள் தொகை அடர்த்தி மற்றும் வடிகால் மாற்றங்கள் உட்பட நிலப்பரப்புக்கு என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்து இந்தப் பகுதி வெள்ளத்தில் மூழ்கக்கூடும் அல்லது பாதிப்பில்லாம் இருக்கும் மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் துணை இயக்குநர் ஜெனரல் ஆம்பன் டிண்டாங் தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் ஆகியவை ஏற்கனவே உள்ள வானிலை அமைப்புகளையும் பாதிக்கின்றன, இதனால் அடிக்கடி தீவிரமான வானிலை நிகழ்வுகள் ஏற்படுகின்றன.

புவி வெப்பமடைதலின் ஒவ்வொரு டிகிரியும் வளிமண்டலத்தில் ஏழு சதவீதம் அதிக ஈரப்பதத்தை சேமிக்கச் செய்யலாம், இதனால் கனமழை பெய்யக்கூடும் என்று அவர் விளக்கினார்.

அதிகரித்து வரும் கடல் வெப்பநிலை பவளப்பாறைகளின் பாதிப்பிற்கு  வழிவகுக்கும். அதே நேரத்தில் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டத்தை உயர்த்தும்.  இது கடலோர மலேசியாவிற்கு மேலும் தாக்கங்களை உருவாக்கும்.

பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமை பாதிக்கும் அதிகரித்த சூறாவளி வலிமை மற்றும் அதிர்வெண் சமீபத்தில் புவி வெப்பமடைதல் தாக்கங்களையும் பிரதிபலிக்கிறது என்று ஆம்பன் குறிப்பிட்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *