நடுவானில் விமானப் பயணிகளிடையே கலவரம்! – AIR ASIA!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 23,

விமானப் பயணத்தின் போது பயணிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவரைச் சரமாரியாகத் தாக்கிக்கொள்ளும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியது. கடந்த திங்கள் கோலாலம்பூரலிருந்து சீனாவை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த AIR ASIA விமானத்தில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. 4 மணி நேரப் பயணத்தின் போது பின் இருக்கையில் இருந்த ஆடவர் ஒருவர் முன்னால் அமர்ந்திருந்த 3 பெண்களை அமைதியாக இருக்கும்படி வலியுறுத்தியதாகவும் கோபமடைந்த 3 இளம்பெண்களும் பின்னிருந்த ஆடவரைத் தாக்கியதாக நம்பப்படுகிறது.

விமானப் பணிப்பெண்கள் நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் சுமார் 20 நிமிடங்கள் இந்த சச்சரவு நீண்டதாகவும் தெரிய வந்துள்ளது. சம்பவத்தின் போது விமானம் நடுவானில் சுமார் 7,000 அடி உயரத்தில் பறந்ததுக் கொண்டிருந்ததாகவும் 3 இளம் பெண்கள் சம்மந்தப்பட்ட ஆடவரின் முகத்திலேயே சரமாரியாகத் தாக்கியதாகவும் சீனா விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது விமான நிலைய அதிகாரிகளிடம் 3 இளம்பெண்களையும் ஒப்படைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *