மீண்டும் அம்னோவில் கைரி! - விண்ணப்பிக்க ஆர்வம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 7:  முன்னாள் அமைச்சர் Khairy Jamaluddin மீண்டும் அம்னோ கட்சியில் சேர ஆர்வம் தெரிவித்துள்ளார்.

அம்னோ தலைவர் Ahmad Zahid Hamidi கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அல்லது இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் உறுப்பினர்களுக்கு மீண்டும் சேர வாய்ப்பு வழங்கப்படலாம் என அறிவித்ததைத் தொடர்ந்து அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

தனது Keluar Sekejap நிகழ்ச்சியில் பேசிய Khairy Jamaluddin, “இது ஒரு நல்ல முன்னேற்றமாகவும் எனக்கு ஒரு நல்ல வாய்ப்பாகவும் தெரிகிறது. கட்சியில் மீண்டும் சேர விண்ணப்பக் கடிதத்தை தயாரிக்கத் தொடங்கலாம்” என்று தெரிவித்தார்.

மூன்று முறை Rembau நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த Khairy Jamaluddin, 15th Malaysian General Election காலத்தில் கட்சி ஒழுங்கு விதிகளை மீறியதாகக் கூறி 2023 ஜனவரியில் அம்னோவில் இருந்து நீக்கப்பட்டார்.

அந்தத் தேர்தலில் அவர் Sungai Buloh தொகுதியில் போட்டியிட்டு, R Ramanan-னிடம்  2,693 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

அம்னோவிலிருந்து லகிய பின்னரும் Khairy Jamaluddin பொதுக் கருத்து பரிமாற்றங்களில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தற்போது அவர் வானொலி தொகுப்பாளராகவும், Keluar Sekejap அரசியல் podcast நிகழ்ச்சியின் இணை தொகுப்பாளராகவும் உள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *