அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதால் ஊழலைக் கட்டுப்படுத்த முடியாது! – டான்ஸ்ரீ அசாம் பாக்கி

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 17: ஊழலுக்கான வாய்ப்புகளை உருவாக்கும் ஆழமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல், அரசு ஊழியர்களின் ஊதியத்தை வெறுமனே உயர்த்துவதற்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் ஆசம் பாக்கி எச்சரித்துள்ளார்.

அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது மட்டுமே ஊழலைக் கட்டுப்படுத்தாது, ஏனெனில் குறைந்த ஊதியம் மற்றும் வறுமை ஆகியவை சிவில் சேவையில் ஊழலுக்கு முக்கிய காரணிகள் அல்ல என்று ஆசம் கூறினார்.

குறைந்த ஊதியம் தான் காரணம் என்று சிலர் நினைத்தால், அரசாங்கத்திற்கு எனது அறிவுரை என்னவென்றால், எச்சரிக்கையாக இருங்கள். எதற்கும் சம்பளத்தை அதிகரித்துக் கொண்டே இருக்காதீர்கள் என்று அவர் நினைவூட்டினார்.

கடந்த மே 1ஆம் தேதி பிரதமர் அன்வார் இப்ராகிம், அரசு ஊழியர்களின் ஊதியம் 13 விழுக்காட்டிற்கும் அதிகமாக உயர்த்தப்படும் என்றும், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

 

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *