ராஜமௌலி-மகேஷ் பாபு இணையும் பிரம்மாண்ட திரைப்படம்!

top-news
FREE WEBSITE AD

இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக அறியப்படும் ராஜமௌலி தற்போது மகேஷ் பாபுவை வைத்து ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அமைதியாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு குறித்த தகவல்களை கசியவிடாமல் படக்குழுவினர் கட்டிக்காத்துக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்து எஸ் எஸ் ராஜமௌலி முதன்முதலாக அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியா மற்றும் உலகமெங்கிலும் வாழும் அன்புள்ள சினிமா விரும்பிகளே, மகேஷ் பாபு ரசிகர்களே…நாங்கள் படப்பிடிப்பை தொடங்கி சிறுது காலம் ஆகிவிட்டது. படத்தை குறித்த உங்களின் ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன். எனினும் படத்தை குறித்து வெறுமனே பேட்டியளிப்பது இந்த படத்துக்கு எந்த வித நியாயத்தையும் சேர்க்காது என்றளவிற்கு இந்த படத்தின் கதை மிகப்பெரியது.

சாராம்சம் மற்றும் ஆழமான உலகத்தை வெளிப்படுத்தும் ஒரு விஷயத்தில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். நவம்பர் மாதம் 2025 ஆம் ஆண்டு அதனை வெளிப்படுத்துவோம். இதற்கு முன் பார்த்திடாத அளவு அதனை வெளிபடுத்த முயற்சி செய்து வருகிறோம். உங்கள் பொறுமைக்கு நன்றி" என ராஜமௌலி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இத்திரைப்படம் சம்பந்தப்பட்ட போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் பலரின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

aiPxvpay

555

aiPxvpay'"

555

@@7qkfI

555

(select 198766*667891)

555

(select 198766*667891 from DUAL)

555