நஜிப் இன்னும் RM 170 கோடி வரியைச் செலுத்தவில்லை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 19: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் இன்னும் கிட்டத்தட்ட 170 கோடி வெள்ளி வரியைச் செலுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த விவகாரம் திட்டவட்டமாக தீர்க்கப்படவில்லை என்றும், உள்நாட்டு வருவாய் வாரியம் (IRB) இதற்கான உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணை  ஜூலை 29 ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள திவால்நிலை உயர்நீதிமன்றத்தில் திட்டமிடப்பட்டுள்ளது" என்று பக்காத்தான் ஹராப்பான் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN Rayer க்கு நாடாளுமன்ற எழுத்துப்பூர்வ பதிலில் அமைச்சு தெரிவித்துள்ளது!

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *