நஜிப் வீட்டுக்காவல் விவகார வழக்கு! ஜூலை 3- ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

top-news
FREE WEBSITE AD


கோலாலம்பூர், ஜூன் 5: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அதிகாரிகளை நிர்பந்திக்கும் முயற்சியில், இரண்டு பிரமாணப் பத்திரங்களை ஆதாரமாக இன்று உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

நஜிப்பின் விண்ணப்பத்திற்கு ஆதரவாக அம்னோ துணைத் தலைவர் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் கடந்த மாத இறுதியில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரமும் ஆதாரமாக அனுமதிக்கப்பட்டது.

இதன் விளைவாக, நீதித்துறை மறுஆய்வு நடவடிக்கைகளைத் தொடங்க நஜிப்புக்கு அனுமதி வழங்கலாமா என்பது குறித்து இன்று தீர்ப்பளிக்கவிருந்த நிலையில், நீதிபதி அமர்ஜீத் சிங், தனது முடிவை ஜூலை 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

நஜிப்பின் கூடுதல் பிரமாணப் பத்திரம் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டதாக மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் ஷம்சுல் போல்ஹாசன் கூறினார்.

இரண்டு பிரமாணப் பத்திரங்களும் புதிய ஆதாரங்களைச் சேர்க்க வேண்டும். நீதிமன்ற அனுமதியின்றி கடிதம் மூலம் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதால் தாங்கள் ஆட்சேபனை தெரிவித்ததாக விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஷம்சுல் போல்ஹாசன் தெரிவித்தார்.

எனினும், இரு பிரமாணப் பத்திரங்களையும் சாட்சியமாக சேர்க்க நீதிபதி அனுமதி அளித்துள்ளார் என்று அவர் கூறினார்.

வழக்கின் சாட்சியங்களின் ஒரு பகுதியாக பிரமாணப் பத்திரங்கள் இருக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை அட்டர்னி ஜெனரலின் அறை கடைப்பிடிப்பதாக ஷம்சுல் கூறினார்.!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *