போராட்டத்தை தேசிய முன்னணி தொடர வேண்டும்-பிளவுபடக்கூடாது என நஜிப் வலியுறுத்துகிறார்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப். 13-

போராட்டத்தை தேசிய முன்னணி தொடர வேண்டும். பிளவுபடக்கூடாது என முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் வலியுறுத்துகிறார் என தேசிய முன்னணி இளைஞர் பிரிவின் தகவல் இயக்குநர் நியோவ் சூ சியோங் கூறினார்.கடந்த வியாழக்கிழமை கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் ஒரு வழக்கில் கலந்து கொண்டிருந்த முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பை சந்தித்தேன்.

அப்போது முன்னாள் தேசிய முன்னணி தலைவருமான அவர் தேசிய முன்னணி போராட்டத்தின் பாரம்பரியத்தை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்,பிளவுபடாமல் இருக்க வேண்டும். ஏனெனில் பிளவு கட்சி கூட்டணியை அழிக்கும் என நஜிப் இந்த மனதை உடைக்கும் செய்தியை தனக்கு தெரிவித்ததாக நியோவ் சூ சியோங் கூறினார்.
நீதிமன்றத்தில் இருப்பது கட்சிக்கு விடைபெறுவதற்காக அல்ல என்று அவர் நகைச்சுவையாக கூறினார்.

மேலும் நான் நீதிமன்றத்திற்குச் சென்றது விடைபெறுவதற்காக அல்ல. மாறாக டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு மீண்டும் வருக என்று சொல்லும் தருணத்திற்காக முழு பிரார்த்தனைகளுடனும் நம்பிக்கையுடனும்
காத்திருந்தேன். அவரது செய்தி ஆன்மாவைத் துளைத்தது.அதாவது தேசிய முன்னணியின் போராட்டத்தின் மரபு தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும்.

இது தான் நம்பிக்கை. இதுதான் போராட்டத்தின் உணர்வு, ஒன்றுபட்ட நாம் நிற்கிறோம்.பிளவுபட்ட நாம் வீழ்கிறோம் என்று அவர் ஒரு முகநூல் பதிவில் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *