நஜிப்பின் வீட்டுக்காவல் விவகாரம்; உண்மையை வெளிப்படையாகக் கூறுங்கள்! - நஜிப் வழக்கறிஞர் சவால்

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 3: மாட்சிமை தங்கிய முன்னாள் பேரரசர், முன்னாள் பிரதமர் நஜிப்  தனது எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டிலேயே அனுபவிக்க அனுமதித்ததாகக் கூறப்படும் துணை ஆணை இருப்பதை வெளிப்படையாக அறிவிக்குமாறு முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வழக்கறிஞர் ஷஃபீ அப்துல்லா அரசுக்கு சவால் விடுத்துள்ளார்.

எந்த ஓர் அரசு அதிகாரியோ அல்லது நிறுவனமோ இந்த ஆவணத்தின் இருப்பை மறுக்கவில்லை. அரசாங்கத்திலிருந்து யாரும் மறுக்க முடியாத மிக முக்கியமான ஒன்றைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அது உண்மையில் இல்லை என்றால், அவர்களால் ஏன் அவ்வாறு சொல்ல முடியாது? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைக் கூறினார். இந்த விஷயம் இல்லை என்று அவர்கள்  கூற வேண்டும். நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்!

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *