நஜிப் வழக்கு விசாரணை ஜூன் 19-க்கு ஒத்திவைப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 4: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் மற்றும் கருவூல முன்னாள் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முஹமட் இர்வான் செரிகார் அப்துல்லா  மீதான 6.6 பில்லியன் வெள்ளி மதிப்பிலான அரசு சொத்துக்கு எதிரான நம்பிக்கை மீறல் வழக்கின் விசாரணையை ஜூன் 19-ஆம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

 

அரசு துணை வழக்கறிஞர் முஹமத் சைபுடின் ஹாஷிம் முஸாய்மி நீதிமன்றத்திடம் விசாரணை தேதியை நிர்ணயம் செய்யுமாறு கேட்டுக் கொண்டதை அடுத்து, அரசுத் தரப்பு சமர்ப்பித்த ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக நீதிபதி டத்தோ முஹமத் ஜமில் ஹுசின், இரண்டு வார கால அவகாசம் வழங்கினார்.

 

கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் தேதி நஜிப்பும் இர்வான் செரிகரும் சர்வதேசப் பெட்ரோலிய முதலீட்டு நிறுவனமான ஐபிஐசி- க்கு செலுத்திய தொகையுடன் தொடர்புடைய 6.6 பில்லியன் மதிப்பிலான மலேசிய அரசு சொத்தின் மீதான நம்பிக்கையை மீறிய ஆறு குற்றச்சாட்டுகளில் குற்றமற்றவர்கள் என்று ஒப்புக்கொண்டனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது பிரம்படி மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *