நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் துரைமுருகனையும் விட்டு வைக்காத ரஜினிகாந்த்!

top-news
FREE WEBSITE AD

"கலைஞர் எனும் தாய்" என்ற அந்த நூல் வெளியீடுட்டு விழை சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று (ஆகஸ்ட் 24) நடைபெற்றது. நூலை முதலமைச்சர் முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட ரஜினி பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் ரஜினிகாந்த் பேசுகையில், " இந்த சபைக்கு வரும் போதே ஜாக்கிரதையாக பேச வேண்டும் என முடிவெடுத்துக்கொண்டேன். அறிவார்ந்தோர் இருக்கும் சபையில் பேசாமல் இருப்பதே புத்திசாலித்தனம். குறிப்பாக, இங்கு வரும் போது என்னவெல்லாம் பேசக்கூடாது என்பதை குறித்து வைத்து இங்கு வந்துள்ளேன்.

எனது நண்பர் முதல்வர் முக ஸ்டாலின் சமீபத்தில் பெற்ற தொடர் தேர்தல் வெற்றிகள் அனைத்தும் அவரின் ஆளுமை, உழைப்பு, அரசியல் ஞானத்தை காட்டுகிறது. ஒரு ஆசிரியர் புதிய மாணவர்களை சமாளிப்பது எளிய காரியம். ஆனால், பழைய மாணவர்களை சமாளிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. இங்கு ஏகப்பட்ட பழைய மாணவர்கள் இருக்கிறார்கள். அதுவும் அவர்கள் சாதாரண மாணவர்களும் கிடையாது. அனைவரும் நல்ல ரேங்க் வாங்கிவிட்டு வகுப்பறையை விட்டு செல்ல மாட்டேன் என்று அமர்ந்துள்ளார்கள்.

முதல்வர் ஸ்டாலின் இவர்களை எல்லாம் சிறு வயதில் இருந்து பார்த்து வந்துவிட்டு இப்போது சமாளிப்பது என்பது சாதாரண விஷயமா என்ன. துரைமுருகன் துரைமுருகன் என ஒருத்தர் இருக்காரு. அவர் கருணாநிதி கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர். அவரிடம் ஏதாவது விஷயத்தை செய்ய போகிறோம் என்று சொன்னால், சந்தோஷம் என்பார். அவர் எந்த அர்த்தத்தில் சந்தோஷம் என்று சொல்கிறார் என்பதை புரிந்துகொள்ளவே முடியாது. இந்த சூழலில் சிறப்பாக செயலாற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஹேட்ஸ் ஆப், தலை வணங்குகிறேன்" என்றார்.

ரஜினியின் இந்த பேச்சுக்கு அரங்கத்தில் இருந்த அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். முதலமைச்சர் ஸ்டாலினும் குலுங்கி குலுங்கி சிரித்து கொண்டே கையெடுத்து கும்பிட்டு நன்றி தெரிவித்தார். பொதுவாக அமைச்சர் துரைமுருகன் பேச்சு தான் கிண்டல் நையாண்டி நிறைந்ததாக இருக்கும் என்ற நிலையில், அவரை குறிப்பிட்டு ரஜினி நாசூக்காக கிண்டலடித்து பேசியது கவனம் பெற்று டிரென்டாகி வருகிறது.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாவது, "சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்த விழாவுக்கு வந்த என்னை ஊக்கப்படுத்தும் வகையில் பேசினார். அவருக்கு என்னை விட ஒரு வயது அதிகம்தான். அதனால் எனக்கு அவர் அறிவுரையும் சொன்னார். ரஜினி சொன்ன அறிவுரையை புரிந்து கொண்டேன். பயப்பட வேண்டாம். எதிலும் தவறிவிடமாட்டேன். எல்லாவற்றிலும் நான் உஷாராக இருப்பேன் என்ற உறுதியை அவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்" என பதில் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *