ஜிவி பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து! மன நிம்மதிக்காக இம்முடிவு என அறிவிப்பு!

top-news
FREE WEBSITE AD

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார், சைந்தவி என்ற பாடகியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு மகன் இருக்கிறார். கடந்த சில தினங்களாக ஜிவி பிரகாஷ் குமாரும் அவரது மனைவி சைந்தவியும் கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து வாழ்வதாகவும் கூறப்பட்டது. அவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாக தகவல் பரவியது.

இந்நிலையில் ஜிவி பிரகாஷ் குமார் அதிகாரப்பூர்வமாக அவர்களது பிரிவை அறிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், எங்கள் 11 வருட திருமண வாழ்க்கைக்கு பின், சமரசமாக பிரிய முடிவெடுத்து இருக்கிறோம். எங்கள் மனநிம்மதிக்காக இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். மீடியா மற்றும் நண்பர்கள் இந்த நேரத்தில் எங்கள் தனிப்பட்ட உணர்வுக்கு மதிப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று ஜிவி பிரகாஷ் குமார், அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார். இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]