ஜாகிர் நாயக் பேசத் தடையில்லை! – உள்துறை அமைச்சர்

- Shan Siva
- 20 Feb, 2025
கோலாலம்பூர், பிப் 20: சர்ச்சைக்குரிய மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் மலேசியாவில் பொது உரைகள் நிகழ்த்துவதைத் தடுக்கும் உத்தரவுகள் எதுவும் இல்லை என்று உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு
தற்காலிகத் தடை இருந்தபோதிலும், அது தற்போது
நடைமுறையில் இல்லை என்று சைஃபுதீன் மக்களவையில் தெரிவித்தார்.
ஜாகிர் நாயக் உரைகள்
நிகழ்த்துவதற்கு அரசாங்கத்தால் எந்தத் தடையும் விதிக்கப்படவில்லையா? என்று பக்காத்தான் ஹராப்பான் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர்
ஆர்.எஸ்.என். ராயரின் கேள்விக்கு
சைஃபுதீன் இவ்வாறு பதிலளித்தார்.
பண மோசடி தொடர்பாக இந்தியாவால் தேடப்பட்டு வரும் மும்பையைச் சேர்ந்த மத போதகரான ஜாகிர் நாயக், 2019 ஆம் ஆண்டு கோத்தா பாருவில் நிகழ்த்திய ஓர் உரையின் போது மலேசியாவில் இந்துக்கள் மற்றும் சீனர்களைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைத்தார். இதனை அடுத்து மலேசியாவில் பேசுவதற்கு அப்போது அவருக்குத் தடை விதிக்கப்பட்டது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *