ஜலான் மஸ்ஜிட் இந்தியா நில அமிழ்வு சம்பவம்! இவ்வாண்டு இறுதிக்குள் முழு விசாரணை அறிக்கை

- Shan Siva
- 03 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 3: ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நிகழ்ந்த நில அமிழ்வு சம்பவம் குறித்த முழு விசாரணை அறிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டாக்டர் சாலிஹா முஸ்தபா தெரிவித்தார்.
தமது அமைச்சு அண்மையில்தான் அறிக்கையைப் பெற்றதாகவும், தற்போது அதன் கண்டுபிடிப்புகளை மதிப்பாய்வு செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
தனக்கு முழு அறிக்கை மட்டுமே கிடைத்தது என்றும், தாங்கள் இன்னும் விவரங்களை ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்ட அவர், அது முடிந்ததும், அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் சமர்ப்பிக்கப்படும் என்று கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *