பட்ஜெட்டிற்கு முன் சிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு! - அமிருடின் ஷாரி

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், ஆகஸ் 5: 2025 பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வெளியிடும் அறிவிப்பின்படி 21,000க்கும் மேற்பட்ட சிலாங்கூர் அரசு ஊழியர்களும் சம்பள உயர்வைப் பெறுவார்கள் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். இந்த உயர்வு மத்திய அரசு நிர்ணயித்த தொகையைப் பொறுத்தது என்று அவர் குறிப்பிட்டார்.

(மத்திய அரசாங்கத்தைப்) பின்பற்றி, எவ்வளவு உயர்வு என்பதைப் பார்ப்போம் என்று குறிப்பிட்ட அவர், தங்களிடம் உள்ள கையிருப்புத் தொகையைக் கொண்டு, சம்பள உயர்வு கொடுக்கப்படும்  என்று அவர் இன்று சிலாங்கூர் அரசு ஊழியர் மாதாந்திர பேரவையில் தெரிவித்தார்.

சிலாங்கூர் அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கான சுற்றறிக்கையை மத்திய அரசிடம் இருந்து மாநில அரசு பெற்ற பிறகு, சிலாங்கூர் அரசு ஊழியர்களின் சம்பள சீரமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்று கடந்த மே 3ஆம் தேதி அமிருடின் கூறியதாக செய்திகள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *