இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மலேசியா!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்,  ஜூன் 16 : உலகின் 10ம் நிலை வீராங்கனையான எஸ்.சிவசங்கரி தனது ஆட்டத்தில் தோல்வியடைந்தாலும், சீனாவின் டேலியன் நகரில் நேற்று நடைபெற்ற ஆசிய டீம் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் மகளிர் பிரிவில் மலேசியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

அரையிறுதியில் முதலிடத்தில் உள்ள மலேசியா 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியுள்ள நிலையில், இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் தென் கொரியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஹாங்காங்கை  மலேசியா எதிர்கொள்கிறது.

அய்ரா அஸ்மான் 11-2, 11-4, 11-5 என்ற செட் கணக்கில் ரிசா சுகிமோட்டோவை வீழ்த்தி மலேசியாவுக்கு நல்ல தொடக்கத்தை அளித்தார்.

இருப்பினும், 41 வது நிமிட ஆட்டத்தில் சடோமி வதனாபே 5-11, 11-7, 12-10, 12-10 என்ற கணக்கில் ஆசிய சாம்பியனான சிவசங்கரியை வீழ்த்தியதால் ஜப்பான் சமன் செய்தது.
தேசிய நம்பர் 2 வீராங்கனையான ரேச்சல் அர்னால்ட் 11-3, 11-3, 11-8 என்ற கணக்கில் அகாரி மிடோரிகாவாவை வீழ்த்தி மலேசியாவுக்கு வெற்றிப் புள்ளியை ஏற்படுத்தினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]

Not Ali Eh

[email protected]