காஸாவில் மீண்டும் தாக்குதல்.... இஸ்ரேலுக்கு மலேசியா கண்டனம்!
- Shan Siva
- 23 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 23: காசாவில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய சமீபத்திய தாக்குதல்களில் குழந்தைகள் மற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு மலேசியா தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
இந்தத் தாக்குதல்கள் சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டத்தின் கடுமையான மீறல் என்று வெளியுறவு அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செப்டம்பர் 29, 2025 அன்று தனது 20 அம்ச அமைதித் திட்டத்தின் ஒரு பகுதியாக அறிவித்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது என்று அமைச்சு வலியுறுத்தியது.
மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்தக் கடமைப்பட்டுள்ளனர் என்பதை மலேசியா மீண்டும் வலியுறுத்துகிறது.
பொதுமக்களின் உயிர்களை இழக்கச் செய்யும் மற்றும் பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகலைத் தடுக்கும் தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று அமைச்சு கூறியது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



