தோஹா மீது இஸ்ரேலின் தாக்குதலுக்கு மலேசியா கண்டனம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 10: தோஹா மீதான இஸ்ரேலின் தாக்குதலை மலேசியா கண்டித்துள்ளது. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதை 'ஒரு திட்டமிட்ட ஆக்கிரமிப்பு செயல்' என்றும் கத்தாரின் இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும் கூறியுள்ளார்.

இந்த தாக்குதல் பொறுப்பற்ற முறையில் பொதுமக்களின் உயிர்களுக்கு ஆபத்தை விளைவித்ததாகவும், இறையாண்மை கொண்ட தலைநகரின் மையத்தில் தாக்கப்பட்டதாகவும், ஏற்கனவே பலவீனமான பிராந்தியத்தை எரிய வைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகவும் அன்வார் கூறினார்.

மலேசியா இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் நீண்ட காலமாக பாலஸ்தீன நோக்கத்தை ஆதரித்து வருகிறது மற்றும் ஒரு சுதந்திர பாலஸ்தீன அரசை நிறுவுவதை ஆதரிக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில், காசா போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற இடமான கத்தார் தலைநகர் தோஹாவில் மூத்த ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து செவ்வாய்க்கிழமை வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல்களை இஸ்ரேலிய இராணுவமும் ஷின் பெட் பாதுகாப்பு நிறுவனமும் இணைந்து நடத்தியதாக இரு அமைப்புகளும் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளன.

திங்கட்கிழமை ஜெருசலேமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். அதற்கொ பதிலடியாக இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

மேற்கத்திய ஆதரவு பெற்ற வளைகுடா நாட்டில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *