ராஃபா பகுதியில் சிக்கிய மலேசிய மருத்துவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்!

top-news
FREE WEBSITE AD


புத்ராஜெயா, ஜூன் 1: பாலஸ்தீனம்  ராஃபா பகுதியில் கடந்த மே 1-ஆம் தேதி முதல் சிக்கித் தவிக்கும் ஆறு பணியாளர்களைக் கொண்ட மலேசிய மருத்துவக் குழு அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

கட்டம் கட்டமாக அவர்கள் அறுவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மருத்துவப் பணியாளர்களில் சிலர் கடந்த 23, 24, 28-ஆம் தேதிகளில் வெளியேற்றப்பட்ட நிலையில், நேற்று  மேலும் இரு மருத்துவ உறுப்பினர்கள் ராஃபாவிலிருந்து மீட்கப்பட்டனர். 

இவ்விவகாரத்தில் ஒத்துழைப்பை  வழங்கிய அனைத்து நாடுகளின் பங்காளிகளுக்கும் வெளியுறவு அமைச்சு நன்றியைத் தெரிவித்துக்கொண்டது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *