மலேசிய ஆடவர் தாய்லாந்தில் கொல்லப்பட்ட சம்பவம்... ஆடை வணிக கடனே காரணம்!

top-news
FREE WEBSITE AD

கடந்த நவம்பர் 1 ஆம் தேதி சுங்கை கோலோக்கில் ஒரு மலேசிய நபர் கொல்லப்பட்ட சம்பவம் போதைப்பொருள் தொடர்பானது  அல்ல என்றும், ஆடை வணிக கடன் தகராறுடன் தொடர்புடையது என்றும் தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாசிர் மாஸைச் சேர்ந்த 33 வயதான சம்பந்தப்பட்ட  ஃபுவாட் ஃபஹ்மி கசாலி, இந்த வழக்கில் முக்கிய சந்தேக நபரான கிளந்தான் FA முன்னாள் கால்பந்து வீரருக்குக் கொடுக்க பல ஆயிரம் ரிங்கிட் கடனைத் தீர்க்கத் தவறிவிட்டதாக நாரதிவாட் காவல்துறைத் தலைவர் பிரயோங் கோட்சகா கூறினார்.

பாதிக்கப்பட்டவருக்கும் சந்தேக நபருக்கும் கடந்த ஆண்டு முதல் கடன் தொடர்பாக பல தகராறுகள் இருந்தன, அவை முன்னர் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் உதவியுடன் தீர்க்கப்பட்டன என்று  அவர் கூறினார்.

இந்த மாதம் மூன்றாவதுமுறை தகராறு ஏற்பட்டதாகவும், இது சுங்கை கோலில் துப்பாக்கிச் சூட்டுக்கு வழிவகுத்ததாகவும் அவர் கூறினார்.

ஃபுவாட் சுங்கை கோலோக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அன்று மாலை இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மருத்துவமனை தகவலின்படி அவரது கணவருக்கு 18 துப்பாக்கிச் சூடு காயங்கள் இருந்ததாக அவரது கர்ப்பிணி மனைவி கூறினார்.

இந்நிலையில் நவம்பர் 2 ஆம் தேதி உள்ளூர் காவல் நிலையத்தில் சரணடைந்த 31 வயது சந்தேக நபரை தாய்லாந்து போலீசார் கைது செய்து, இரண்டு கைத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *