மலேசிய ஆடவர் இரட்டையர் மூன்றாம் சுற்றில் தோல்வி!
- Muthu Kumar
- 30 Aug, 2025
கோலாலம்பூர், ஆக. 30
மலேசிய ஆடவர் இரட்டையர் கோ சே பெய்-நூர் இஸ்ஸுதின் ரும்சானி ஜோடி, உலக சாம்பியன்ஷிப் மூன்றாம் சுற்றில் தைவான் ஜோடியான லீ ஜே ஹூய்-யாங் போ ஹ்சுவானிடம் தோல்வியடைந்து வெளியேறியது. இந்தப் போட்டி அடிடாஸ் அரங்கில் நடைபெற்றது.
இந்தத் தீவிரமான போட்டி மூன்று செட்களாக நீடித்தது. உலக தரவரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ள சே பெய்-இஸ்ஸுதின், 50 நிமிடங்கள் நீடித்த போராட்டத்தில் 20-22, 21-15, 21-23 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவினர். இந்தத் தோல்வி, இந்த மலேசிய ஜோடியின் சிறப்பான பதிவை முடிவுக்கு கொண்டுவந்தது. இதற்கு முன், உலக தரவரிசையில் 18ஆவது இடத்தில் உள்ள தைவான் ஜோடியை நான்கு முறை சந்தித்து மூன்று முறை வெற்றி பெற்றி ருந்தனர்.
கடந்த மே மாதம் உலகின் நம்பர் ஒன் இரட் டையர் ஜோடியாக இருந்த சே பெய் இஸ்ஸு தின், தங்கள் வாழ்க்கையில் பல முக்கிய சாம்பியன்ஷிப்களை வென்று உயர்ந்த புகழுடன் இப்போட்டிக்கு வந்திருந்தனர். இருப்பினும், தைவான் ஜோடியின் தீவிரமான ஆட்டத்திற்கு முன் அவர்களால் முன்னேற முடியவில்லை.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



