மலேசிய விளையாட்டு குழு உலகளாவிய கோகோ போட்டிக்கு இந்தியா செல்கின்றனர்!

- Muthu Kumar
- 10 Jan, 2025
கிள்ளான், ஜன. 10-
கிள்ளான், மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி தங்கும் விடுதியில் ஒரு மாத காலம் தங்கி கோகோ விளையாட்டு வீரர்கள் பயிற்சியை முடித்துக் கொண்டு நாளை சனிக்கிழமை இந்தியா செல்கின்றனர்.
மிட்லண்ட்ஸ் சிறிய மண்டபத்தில் வழியனுப்பும் விருந்து உபசரிப்பிற்கு சிறப்பு வருகை தந்த செனட்டர் சரசுவதி கந்தசாமி உரையாற்றும் போது போட்டியில் வெற்றி பெற்று நாட்டுக்கு பெருமை சேர்க்கும் படி கேட்டுக்கொண்டு வாழ்த்தி பாராட்டை தெரிவித்து நாடு திரும்பியதும் சிறப்பு பரிசும்
பாராட்டு விருந்தும் வழங்கப்படும் என்றார்.
அதோடு கோகோ விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி கொடுத்த ஆசிரியர்கள் அனைவருக்கும் நினைவு பரிசும் வழங்கினார்.
வழியனுப்பும் விருந்து நிகழ்ச்சியில் பயிற்சி தந்த ஆசிரியர்கள், பள்ளி தலைமையாசிரியர் கோவிந்தசாமி, பள்ளி வாரியத்தலைவர் உதயசூரியன், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் சரவணன், வாரிய உறுப்பினர்கள் சு.குமாரவேல், மு.சீரியநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *