ஜப்பானில் இருந்து 17 ஆளில்லா விமானங்கள்; 7 படகுகள்! மலேசியா பெறுகிறது

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர். செப் 22: ஜப்பான் மற்றும் மலேசியா இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு உதவி முயற்சியின் கீழ், ஜப்பானிடமிருந்து 14 ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏழு மீட்புப் படகுகளை மலேசியா பெற்றுள்ளது.

இராணுவம் ஆறு யுஏவிகளைப் பெறும் என்றும், ராயல் மலேசிய கடற்படை மேலும் ஆறு பிரிவுகளைப் பெறும் என்றும் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின் உறுதிப்படுத்தினார்.

சிறப்பு நடவடிக்கைகளுக்காக மலேசிய ஆயுதப்படைகளின் சைபர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவுக்கு இரண்டு கூடுதல் யுஏவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக ஜப்பானின் OSA கூட்டாளி நாடுகளுக்குபாதுகாப்பு உபகரணங்களை வழங்குகிறது என்று முகமது காலிட்  விளக்கினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *