GISBH உயர்மட்ட ஊழியர்கள் கைது - அமைதி மற்றும் பிரார்த்தனைக்கு GISBH அழைப்பு!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா: குளோபல் இக்வான் சர்வீசஸ் அண்ட் பிசினஸ் ஹோல்டிங்ஸ் (ஜிஐஎஸ்பிஹெச்) அதன் தலைமை நிர்வாக அதிகாரி நசிருதீன் அலி உட்பட பல உயர் நிர்வாக ஊழியர்கள் புதன்கிழமை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதை அடுத்து அமைதி மற்றும் பிரார்த்தனைக்கு அந்நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
அனைத்து தரப்பினரும் சட்டத்தை மதிக்க வேண்டும் என்றும் அடுத்த சில நாட்களில் போலீஸ் விசாரணையின் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே, இந்த சிக்கல்கள் மற்றும் சவால்கள் விரைவாக தீர்க்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் நீதி நிலைநாட்டப்படுவதற்கு அனைவரின் ஒத்துழைப்பையும் பிரார்த்தனைகளையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று, அந்நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த 19 பேருக்கு எதிராக போலீஸார் ஏழு நாள் காவலில் வைக்க உத்தரவைப் பெற்றனர். 25 முதல் 65 வயதுக்குட்பட்ட 7 பெண்கள் உட்பட 19 பேரும் செப்டம்பர் 25ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்!


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *