திருச்சியில் என்டிஏ கூட்டணி பொதுக்கூட்டம் - மோடி வருகை!

top-news
FREE WEBSITE AD

என்டிஏ கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று திருச்சி வர இருக்கிறார்.  அதுமட்டுமல்லாமல் ரூ.5,655 கோடிக்கும் அதிகமான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கும் இந்தியப் பிரதமர் மோடி, ராமேஸ்வரம் - மங்களூரு விரைவில் ரயில், நெல்லை - மங்களூரு விரைவில் ரயில் உள்ளிட்ட 5 ரயில் சேவைகளையும் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.

சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், பிரதமர் நரேந்திர மோடி தொடர்ச்சியாக தமிழ்நாட்டிற்கு வரத் தொடங்கியுள்ளார். ஜனவரி மாதம் மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மோடி, மார்ச் 1ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இந்த நிலையில் இன்று திருச்சியில் நடக்கவிருக்கும் என்டிஏ பொதுக்கூட்டத்தில் இந்தியப் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

கொச்சியில் இருந்து விமானத்தில் வரும் இந்தியப் பிரதமர் மோடி, இந்திய நேரப்படி மாலை 5 மணியளவில் திருச்சி வருகிறார். இதன்பின் எடமலைப்பட்டி புதூரில் நடைபெறும் அரசு விழாவில் சென்னை மணலியில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவன எண்ணெய் கலவை ஆலை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நக எரிவாயு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

அதேபோல் 370.52 கிமீ நீளமுள்ள கிராமப்புற சாலைகள், கங்கைகொண்ட சோழபுரத்தில் புறவழிச்சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட ரூ.5,655 கோடிக்கும் அதிகமான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். அதேபோல் ராமேஸ்வரம் - மங்​களூரு விரைவு ரயில், நாகர்​கோ​வில்- சார்லப்​பள்ளி அம்​ரித் பாரத் விரைவு ரயில், போத்​தனூர் - தன்​பாத் அம்​ரித் பாரத் விரைவு ரயில், நெல்லை - மங்​களூரு விரைவு ரயில், மயி​லாடு​துறை-காரைக்​குடி ரயில் ஆகிய 5 ரயில் சேவை​களை இந்தியப் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்​கிறார்.

இதையடுத்து என்டிஏ கூட்டணியின் பொதுக்கூட்ட விழாவில் இந்தியப் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, டிடிவி தினகரன், ஜிகே வாசன், பாரிவேந்தர், ஜான் பாண்டியன் உள்ளிட்ட என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும், தொண்டர்களும் பங்கேற்கின்றனர்.

இதன்பின் பஞ்சப்பூர், எடமலைப்பட்டி புதூர், சிறப்பு காவல்படை முகாம், மன்னார்புரம் 4 சாலை, டிவிஎஸ் டோல்கேட் வழியாக விமான நிலையம் வரை 10 கிமீ தூரம் இந்தியப் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடக்க உள்ளது. இதன்பின் இந்திய நேரம் இரவு 8 மணியளவில் திருச்சியில் இருந்து இந்தியப் பிரதமர் மோடி டெல்லி புறப்படுகிறார். பிரதமரின் வருகையால் திருச்சியில் உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதேபோல் இசட் பிரிவு பாதுகாப்பு என்பதால் மத்திய தொழிற்பாதுகாப்பு படை, மாநகர காவல்துறை என்று திருச்சி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட உள்ளது. அதேபோல் திருச்சியில் இன்று டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *