சூர்யா நடிக்கும் 44 வது திரைப்படத்தின் பெயர் சிறை?

top-news
FREE WEBSITE AD

தமிழில் மட்டும் கவனம் செலுத்திவந்த சூர்யா தற்பொழுது இந்தி திரையுலகிலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். விரைவில் அவர் ஒரு இந்தி படத்தில் நடிக்கவிருக்கிறார். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். அந்த இந்தி படத்துக்காகத்தான் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் மும்பையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதுகுறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

அதேசமயம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இது சூர்யாவுக்கு 44ஆவது படம் ஆகும். இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஷூட்டிங் சமீபத்தில்தான் தொடங்கியது. படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. சூழல் இப்படி இருக்க படம் பற்றிய புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, படத்துக்கு சிறை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும்; சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23ஆம் தேதி அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *