மேகதாது அணை கட்ட அனுமதி இல்லையென்றால் கர்நாடகாவில் தமிழ் படங்கள் ஓடாது!

top-news
FREE WEBSITE AD

கர்நாடக சட்டசபையில் மார்ச் 7ம் தேதி வெள்ளிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, மேகதாது அணை கட்டுவதற்கான ஆயத்தப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டன.மத்திய அரசு அனுமதி கொடுத்தவுடன் அணை கட்டி முடிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல், தலைகீழாக நின்றாலும் கர்நாடகா அரசால், மேகதாது அணையை கட்ட முடியாது" என பதிலடி கொடுத்துள்ளார்.அதே நேரத்தில் மேகதாது அணையை கட்ட வலியுறுத்தி தமிழக - கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த அமைப்பைச் சேர்ந்த வாட்டாள் நாகராஜ் , "மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு ஒரு மாதத்திற்குள் அனுமதி வழங்க வேண்டும். இல்லையென்றால், கர்நாடகாவில் தமிழ் படங்கள் ஓடாது. காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கவே மேகதாது அணை கேட்கிறோம்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *