சுங்கை பக்காப்பில் தமிழ்ப்பள்ளி! PH வெற்றிபெற்றால் நிறைவேற்றப்படும்! - அஹமட் ஸாஹிட் ஹமிடி உறுதி

top-news
FREE WEBSITE AD

சுங்கை பக்காப், ஜூலை 4:  சுங்கை பக்காப் சட்டமன்ற இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான்  வெற்றி பெற்றால் இரண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அம்னோ தலைவரும், துணைப்பிரதமருமான டத்தோஸ்ரீ டாக்டர் அஹமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

மூத்த குடிமக்கள் செயல்பாட்டு மையம் மற்றும் சுங்கை பக்காப்பில் ஒரு தமிழ்ப் பள்ளியைக் கட்டித் தருவதே அந்த இரு திட்டங்கள் என்று அவர் கூறினார்.

இந்த முன்மொழிவு பின்னர் செயல்படுத்தப்பட வேண்டும் என்று தாம் கருதுவதாகவும் அவர் கூறினார்.

சுங்கை கெச்சிலில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முக்கிய தலைவர்கள் கலந்துகொண்ட நிகழ்வில் அவர் இதனைத்  தெரிவித்தார்.

இதற்கிடையில், சுங்கை பக்காப் வெற்றி. பினாங்கு மாநில அரசாங்கத்திற்கும், ஒற்றுமை அரசாங்கத்தின் பிம்பத்திற்கும் மிகவும் முக்கியமானது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

சுங்கை பக்காப் சட்டமன்றத்தில் டாக்டர் ஜூஹாரியை வெற்றிபெறச் செய்ய அனைத்து வாக்காளர்களும் முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

கடவுள் சித்தமானால், அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், நிச்சயமாக சுங்கை பக்காப் மக்கள் அதிக நன்மை பெறுவார்கள். ஏனெனில் அவர் ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் உள்ள மாநில அரசாங்கத்துடன் ஒன்றாக இருப்பார் என்று ஸாஹிட்  கூறினார்!

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *