நான் பயப்படவில்லை; நீதிமன்றத்தில் சந்திப்போம்! – கோக்கிற்கு அக்மால் சவால்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 11: ஹலால் சான்றிதழைப் பற்றிய தனது கருத்துக்களுக்கு எதிராக செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரேசா கோக் எடுக்கக்கூடிய சட்ட நடவடிக்கையால் தாம் பயப்படவில்லை என்று அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டாக்டர் முகமட் அக்மல் சலே தெரிவித்துள்ளார்.

டிஏபி உதவித் தலைவரான தெரேசா கோக்கை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

தெரசா கோக் காவல்துறை தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டபோது, ​​​​தன் மீது வழக்குத் தொடர பரிசீலிப்பதாக  அறிவித்தார் என்று அக்மால் சலே தெரிவித்தார்.

முன்னதாக, முஸ்லீம் அல்லாத உணவகங்கள் மற்றும் உணவு நிறுவனங்களுக்கு ஹலால் சான்றிதழை கட்டாயமாக்குவது வர்த்தகர்களுக்கு சுமையை ஏற்படுத்தும் என்று தெரசா கூறியதை அடுத்து,  டாக்டர் அக்மல் அவரை விமர்சித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *