மனிதர் உணர்ந்து கொள்ள நான் மனிதப் பிறவி அல்ல... அதையும் தாண்டி – மோடியின் உலக மகா காமெடி

top-news
FREE WEBSITE AD

 என்னை பூமிக்கு அனுப்பியது பரமாத்மாதான் என வேத காலத்து பூமராய் புதிய கதைவிட்டு காமெடினாகியிருக்கிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. 

எல்லாரையும் போல உயிரியல் ரீதியாக தாம் பிறக்கவில்லை என்றும், தாம் மனிதப் பிறவியாகப் பிறந்திருக்க வாய்ப்பே இல்லை என்றும், பூமிக்குத் தன்னை அனுப்பியது பரமாத்மாதான் என்றும் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் 10 ஆண்டுக்ள் பிரதமராக இருக்கும் மோடி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்  தெரிவித்துள்ளார்.

 

இப்படிப்பட்ட ஒருவரை மக்கள் எப்படி 10 ஆண்டுகள் பிரதமராகத் தேர்ந்தெடுத்தார்கள், சகித்துக்கொண்டார்கள் என்பதுதான் இப்போது பேசு பொருளாக இருக்கிறது.

 

சமூக ஊடகங்களில் விமர்சனங்களால் பந்தாடப்பட்டு வருகிறார் பாரதப் பிரதமர் மோடி.

 

இந்தப் பூமியில் ஏதோ ஒன்றை நிறைவேற்றுவதற்காக கடவுள் அவரை பூமியில் அனுப்பி வைத்திருக்கிறாராம். தேர்தல் நேரங்களில் நாடகம் போடுவது, ரோடு ஷோ நடத்துவது, முடிக்கப்படாத கோயிலைத் திறந்து மார்தட்டிக்கொள்வது என்று பொய்களால் மக்களைக் கட்டமைத்த மோடி, இப்போது சொல்லியிருக்கும் பொய்யைவிட இனி சிறப்பான பொய்களை அவரால் சொல்ல முடியாது என்கிறார்கள் இணையத்தள வாசிகள்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *