Kampung Gong Hilir - அதிகாலையில் தீ விபத்து!

top-news
FREE WEBSITE AD

பாச்சோக், ஜூலை 19: Kampung Gong Hilir ரில் உள்ள ஒரு வீட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு தம்பதி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளின் கழுத்து மற்றும் கைகளில் தீக்காயம் ஏற்பட்டது.

 

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் நடந்ததாக பச்சோக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

 

அதிகாலை 5.48 மணியளவில் அவசர அழைப்பு வந்ததையடுத்து 14 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

 

30 நிமிடங்களில் தீ அருகில் உள்ள மற்ற வீடுகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்தினர்.

 

இந்த விபத்தில் காயமுற்ற நான்கு பேரும் அருகிலுள்ள கிளினிக்கிற்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

 

தீ விபத்துக்கான காரணம் மற்றும் ஏற்பட்ட இழப்புகள் இன்னும் விசாரணையில் உள்ளன!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *